Sunday 1 July 2012


பாரதி பார்வையில் இன்றைய பாரதம்


"அமலா பால்" அளவிற்கு
தமிழ் பால் ஈந்த  
பாரதி பரீட்சயம் இல்லை
நமக்கு
அதனால் இந்த அறிமுகம் 

பாரதீ தன்
பேருக்குள்ளே தீயை
வைத்த பெருங்கவி 
தன் முண்டசுக்குள் 
மூடத்தனத்தை கட்டிப்போட்ட 
புரட்சிக்கவி

விண்ணுலகம் விட்டு
மண்ணுலகம் வந்தான்
தான் அடிமை விலங்கு 
ஒடித்த பாரதம் நோக்கி

வந்திறங்கிய இடம்
சமத்துவம் நிலவும் 
டாஸ்மாக் கடை

நிமிர்ந்த நடை 
நேர்கொண்ட பார்வை
என்று சொன்ன பாரதியிடம்
தள்ளாடிவந்தான்
தமிழ் குடிமகன்

என்ன மகனே
பசியா? என
பரிவாய் கேட்டான்
நேச கவி

இல்லை இல்லை 
போலி மதுவால் 
போதை என்றான்

மீண்டும் தொடர்ந்தான் 
நீங்கள் என்ன 
அரசு அதிகாரியா?
மதுக்கடையில் ஆய்வா?
போலிகளை பிடித்து 
நயம் சரக்காய் வைக்க 
சொல்லுங்கள் - என 
நக்குழறி நகர்ந்தான்
 
பாருக்குள்ளே நல்ல நாடு
பாரதம் என்றேனே -அது
இதுதானா?
என பரிதவித்தான் பாரதி

அங்கிருந்து அகன்று
மெதுவாய் வந்து 
நின்றான்
ஆடம்பர அங்காடி முன்

ஐயா என தடுத்து 
நிறுத்தினான் ஒருவரை
அய்யோ 
நான் ஆண் அல்ல 
பெண் என்றால்

பெண்ணுரிமை கிடைத்ததா?
என பெருந்தவிப்புடன் 
கேட்டான் பாரதி

ஆறடி கூந்தல் அரை அடியாய்
அதுவும் அவிழ்ந்த நிலையில்
உதட்டு சாயம் நாவால் தடவி
நவின்றால் அவள்

தனக்கு வீட்டில் 
துணிதுவைக்கும் கணவனிடம் 
கேட்டு சொல்வதாய்

நொந்தான் பாரதி 
இதுவா நான் சொன்ன 
பெண்ணுரிமை என

பாரதியின் பயணம் தொடரும் .........





 










Tuesday 21 June 2011

COMPUTERTHIRUKKURAL..


1.Bug kandupiditharae oruthal avar naana DeBUG seidhuvidal.

2.COPY PASTE seidhu vazhvaarae vazhvoarmattravarellam CODING seidhu saavaar.

3.emmozhi marandhaarkumJOB undaam JOB illai 
C i Marandhavarkku. 

4.CHAT -tinil YAHOO.Chat seiga illaiyael CHAT-in 
CHATtaamai nandru.

படித்ததில் பிடித்தது

திருமணம்
பத்து பொருத்தங்கள் பார்த்து
ஒன்பது நவகிரகங்கள் சாச்சியாக
எட்டு திசைகளிலும்
யாழுமலயனே என்று கூறி
அரும் சுவை உணவு படைத்து
ஐய் பேறும் பூதங்கள் முன்னிலையில்
அறம், பொருள் ,இன்பம் ,வீடு ஆகிய நான்கின் அடிபடையில்
மூன்று முடிச்சு போட்டு
இரண்டு மனங்கள் ஒன்று சேறுவதே
திருமணம் ஆகும்

Saturday 18 June 2011

என்னை செதுக்கியவர்கள்

முதல் பள்ளி அனுபவம்
மனதில் பசுமரத்து ஆணியாய்

என் வலது கரம் வளைத்து
இடது செவி தொட
முடிந்தது நுழைவு தேர்வு

முதுகில் சத்துணவு தட்டு
கட்டி தொடங்கியது
என் முதல் பள்ளி பயணம்

பெருமாள் வாத்தியார்
மூக்குப்பொடியால் பழுப்பான
நாசி
சிவந்து தெறித்து விழும்
விழி
என் முதல் வகுப்பு
வாத்தியார்
கேட்டாலே மிரட்டும்
குரல்

பாடம் கூட கரகரப்பு
குரலில் பாட்டாய் செவிகுழி
மிரட்டும்

காலையில் பள்ளி சுத்தம்
செய்ய பேப்பர் பொறுக்குவதற்கு
சத்துணவுக்கு முன்
காலையில் கடவுள் வாழ்த்து
என முழங்கும் அவர் குரல்
என்னுள் இடியாய் அதிரும்

ஒரு இருபத்தைந்து பைசா
கேட்டு அடம்பிடிக்க
வடம்பிடித்து இழுக்கும்
தேராய் இழுத்து   சென்று
அவர் முன் என் அம்மா
நிறுத்த

நாசி சொரிந்த கரம் எடுத்து
என்னை முதன் முதலாய்
முதுகில் மட்டும்  அல்ல
வாழ்க்கையிலும் செதுக்கியவர் 






பழமொழி அர்த்தமும் அனர்த்தமும்

தமிழ் இலக்கியங்களில் மரு மொழி என்றொரு பகுதி உண்டு அதாவது காலப்போக்கில் மாறிவிடும் பெயர் வழக்கு. இது பெரும்பாலும் ஊர் பெயர்களாகவோ ஒரு இடத்தின் பெயர்களாகவோ இருக்கும். உதாரணமாக மதுரைக்கு அருகில் உள்ள ஒரு ஊரின் பெயர் சோழன் உவந்த ஊர் பின்பு காலப்போக்கில் மருவி தற்போது சோழவந்தான் என்று அழைக்கபடுகிறது. இத போல் நமது பழமொழிகளும் நம் மக்களின் வசதிக்கேற்பவோ அல்லது மருவியோ அர்த்தங்கள் மாறி அபத்தமாகி விட்டன.

1.சேலை கட்டிய மாதரை நம்பாதே என்றொரு பழமொழி வழக்கத்தில் உள்ளது. ஆனால் உண்மையில் பழமொழி "சேள் அகட்டிய  மாதரை நம்பாதே" என்பதே.  சேள் என்றால்  கண், அகட்டிய என்றால் சிமிட்டுதல் அதாங்க கண் அடிக்கிற ஒழுக்கம் பிறழ்ந்த பெண்ணை நம்பக்கூடாது என்பதுதான் உண்மையான  பொருள்.
2. களவும் கற்று மற  இது ஒரு பழமொழி இதன்படி பொருள் கூர்ந்தால்  களவை வசதியாக கற்று நன்றாக திருடி செட்டில் ஆனபிறகு மறந்துவிடு எனபது போல் உள்ளது. ஆனால் களவும் + அகற்று + மற = அதாவது களவு என்ற எண்ணமே மனதில் வராமல் அகற்ற வேண்டும் பின்பு அப்படியொரு எண்ணம் தோன்றி அகற்றிய நிகழ்ச்சியைக்கூட மறந்து விட வேண்டும் என்பதாகும் .


Friday 17 June 2011

நண்பேண்டா....


நட்பு", உச்சரிக்கும்போதே உள்ளுக்குள் ஒரு பட்டாம்பூச்சி பறக்கும், உள்ளம் எல்லாம் உற்சாகம் நிரம்பும், நண்பன் என்றவுடன் நம்   இதயத்துள் ஒரு சில முகங்கள் நிழல்லாடும், நட்பு மூன்றெழுத்து மந்திரம் சிறு வயது நட்பு கம்மற்கட்டில் ஆரம்பித்து பாண்டி விளையாட்டு, பம்பரம், என தொடர்ந்து சிறு சிறு சச்சரவு என வளரும். அப்போதெல்லாம் நமக்குள் மிகப்பெரிய பேதம்  ஏற்படுவதில்லை. பள்ளிக்கூட  நட்பு இதுவும் சுவாரஷ்யமானது இதிலும் பெரிதாய் பேதமோ, விரிசலோ, மன புகைச்சலோ இருப்பதில்லை. அடுத்தது கல்லூரி நட்பு வாழ்கையின் வசந்தம் தொடும் வயதில் பூக்கும் நட்பு இது அடிதடி, ஆறுதல், போட்டி என இருந்தாலும் வன்மம் ஏற்படுவதில்லை.  ஆனால் நட்பில் எங்கு வன்மத்தின் வாசம்  அடிக்க ஆரம்பிக்கிறது?????????

மனிதன் வாழ்கையின் உயரம் அறிந்து முன்னேற துடிக்கும்போது நட்பு தூரம் போய் விடுகுறது. அலுவலுக நட்பு என்பது எப்போதுமே பெரிதாய் வாழ்கையில் நேர்மறையான பதிப்பை ஏற்படுத்துவதில்லை. மனிதன் தன் சுய முன்னேற்றத்திற்காக முதல் முறையாக நட்பை கொச்சை படுத்தும் நிகழ்வு இங்கு தான் அரங்கேறுகிறது. இங்குதான் நட்பு முகமூடி இட்டுக்கொல்கிறது. நண்பன் போட்டியாளனாய் அறிமுகமாகிறான், சிரித்த முகம் சிறுத்துவிடுகிறது . நட்புக்களம் போர்க்களமாய் மாறுகிறது. அகம் பார்த்த நட்பு முகம் பார்க்கக்கூட மறுக்கிறது. இது எதனால் மனிதன் மனதளவில் பண்படவில்லை என்றால் நட்பு என்னும் உறவு கல்லூரி வாழ்கையோடு முற்றுப்பெற்றுவிடும். அகநக நட்பிக்காவிட்டலும் முகநக நட்பிக்கலாம்.        
  
 

நன்றிகள் பல

வலைதளத்திற்குல் இப்படியொரு வலைப்பூவின்
 வாசம் உள்ளதை என் நாசிக்கு உணர்த்திய என் அன்பு நண்பர் கார்த்திகை பாண்டியனுக்கு (கா.பா. )  நன்றிகள் பல
எனக்கென்று ஒரு ப்ளாக் உருவாக காரணமான என் அன்பு நண்பர் விஜயானந்திற்கும் நன்றிகள் பல  பல
இவர்தாங்க நம்ம ப்ளாக் வடிவமைப்பாளர்