திருமணம்
பத்து பொருத்தங்கள் பார்த்து
ஒன்பது நவகிரகங்கள் சாச்சியாக
எட்டு திசைகளிலும்
யாழுமலயனே என்று கூறி
அரும் சுவை உணவு படைத்து
ஐய் பேறும் பூதங்கள் முன்னிலையில்
அறம், பொருள் ,இன்பம் ,வீடு ஆகிய நான்கின் அடிபடையில்
மூன்று முடிச்சு போட்டு
இரண்டு மனங்கள் ஒன்று சேறுவதே
திருமணம் ஆகும்
தமிழ் இலக்கியங்களில் மரு மொழி என்றொரு பகுதி உண்டு அதாவது காலப்போக்கில் மாறிவிடும் பெயர் வழக்கு. இது பெரும்பாலும் ஊர் பெயர்களாகவோ ஒரு இடத்தின் பெயர்களாகவோ இருக்கும். உதாரணமாக மதுரைக்கு அருகில் உள்ள ஒரு ஊரின் பெயர் சோழன் உவந்த ஊர் பின்பு காலப்போக்கில் மருவி தற்போது சோழவந்தான் என்று அழைக்கபடுகிறது. இத போல் நமது பழமொழிகளும் நம் மக்களின் வசதிக்கேற்பவோ அல்லது மருவியோ அர்த்தங்கள் மாறி அபத்தமாகி விட்டன.
1.சேலை கட்டிய மாதரை நம்பாதே என்றொரு பழமொழி வழக்கத்தில் உள்ளது. ஆனால் உண்மையில் பழமொழி "சேள் அகட்டிய மாதரை நம்பாதே" என்பதே. சேள் என்றால் கண், அகட்டிய என்றால் சிமிட்டுதல் அதாங்க கண் அடிக்கிற ஒழுக்கம் பிறழ்ந்த பெண்ணை நம்பக்கூடாது என்பதுதான் உண்மையான பொருள்.
2. களவும் கற்று மற இது ஒரு பழமொழி இதன்படி பொருள் கூர்ந்தால் களவை வசதியாக கற்று நன்றாக திருடி செட்டில் ஆனபிறகு மறந்துவிடு எனபது போல் உள்ளது. ஆனால் களவும் + அகற்று + மற = அதாவது களவு என்ற எண்ணமே மனதில் வராமல் அகற்ற வேண்டும் பின்பு அப்படியொரு எண்ணம் தோன்றி அகற்றிய நிகழ்ச்சியைக்கூட மறந்து விட வேண்டும் என்பதாகும் .
நட்பு", உச்சரிக்கும்போதே உள்ளுக்குள் ஒரு பட்டாம்பூச்சி பறக்கும், உள்ளம் எல்லாம் உற்சாகம் நிரம்பும், நண்பன் என்றவுடன் நம் இதயத்துள் ஒரு சில முகங்கள் நிழல்லாடும், நட்பு மூன்றெழுத்து மந்திரம் சிறு வயது நட்பு கம்மற்கட்டில் ஆரம்பித்து பாண்டி விளையாட்டு, பம்பரம், என தொடர்ந்து சிறு சிறு சச்சரவு என வளரும். அப்போதெல்லாம் நமக்குள் மிகப்பெரிய பேதம் ஏற்படுவதில்லை. பள்ளிக்கூட நட்பு இதுவும் சுவாரஷ்யமானது இதிலும் பெரிதாய் பேதமோ, விரிசலோ, மன புகைச்சலோ இருப்பதில்லை. அடுத்தது கல்லூரி நட்பு வாழ்கையின் வசந்தம் தொடும் வயதில் பூக்கும் நட்பு இது அடிதடி, ஆறுதல், போட்டி என இருந்தாலும் வன்மம் ஏற்படுவதில்லை. ஆனால் நட்பில் எங்கு வன்மத்தின் வாசம் அடிக்க ஆரம்பிக்கிறது?????????
மனிதன் வாழ்கையின் உயரம் அறிந்து முன்னேற துடிக்கும்போது நட்பு தூரம் போய் விடுகுறது. அலுவலுக நட்பு என்பது எப்போதுமே பெரிதாய் வாழ்கையில் நேர்மறையான பதிப்பை ஏற்படுத்துவதில்லை. மனிதன் தன் சுய முன்னேற்றத்திற்காக முதல் முறையாக நட்பை கொச்சை படுத்தும் நிகழ்வு இங்கு தான் அரங்கேறுகிறது. இங்குதான் நட்பு முகமூடி இட்டுக்கொல்கிறது. நண்பன் போட்டியாளனாய் அறிமுகமாகிறான், சிரித்த முகம் சிறுத்துவிடுகிறது . நட்புக்களம் போர்க்களமாய் மாறுகிறது. அகம் பார்த்த நட்பு முகம் பார்க்கக்கூட மறுக்கிறது. இது எதனால் மனிதன் மனதளவில் பண்படவில்லை என்றால் நட்பு என்னும் உறவு கல்லூரி வாழ்கையோடு முற்றுப்பெற்றுவிடும். அகநக நட்பிக்காவிட்டலும் முகநக நட்பிக்கலாம்.
வலைதளத்திற்குல் இப்படியொரு வலைப்பூவின்
வாசம் உள்ளதை என் நாசிக்கு உணர்த்திய என் அன்பு நண்பர் கார்த்திகை பாண்டியனுக்கு (கா.பா. ) நன்றிகள் பல
எனக்கென்று ஒரு ப்ளாக் உருவாக காரணமான என் அன்பு நண்பர் விஜயானந்திற்கும் நன்றிகள் பல பல
இவர்தாங்க நம்ம ப்ளாக் வடிவமைப்பாளர்